Friday, 10 August 2012

வீட்டுக்குள்ளே..முடங்கி..இருந்தால்...குழந்தை.பிறப்பு..பாதிக்கும்


                                 *இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும்  தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை.
                             *இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.
மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.


                      *விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.
        
                     தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது  விந்தணுக்கள் வலிமையடைகின்றன. தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் கால்களுக்கு இதமாக  நடந்து
வருவது தான் !

                      *இந்த ஆய்வை நடத்திய போது இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.
                *இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது.அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.
           *புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும்.... 

Thursday, 9 August 2012

பாலியல் தொழிலாளியாக வேஷம் கட்டுகிறாராம்,,,,ஆன்ட்ரியா.

                                         


                                                       செல்வராகவனின் குரூப்பிலிருந்து வெளிவந்த பிறகு ஆன்ட்ரியாவுக்கு தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. முன்பு அவரை அணுக தயங்கியவர்கள். 
                                      இப்போது தாராளமாக அணுகுகிறார்கள். ஆன்ட்ரியாவும் பொறுமையாக கதைகேட்டு வருகிறார். கமலின் விஸ்வரூபத்தில் நடித்து வரும் ஆன்ட்ரியா இந்தப் படம் வெளிவந்த பிறகுதான் தமிழில் புதிய படத்தில் புதிய சம்பளத்துடன் கமிட் ஆவது என்ற முடிவில் இருக்கிறார்.
                                       இதற்கிடையில் இவர் நடித்துள்ள புதிய திருப்பங்கள் படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதில் பத்திரிகையாளராக நடித்துள்ள ஆன்ட்ரியா. ஒரு ரகசிய செய்தி சேகரிப்பதற்காக பாலியல் தொழிலாளியாக வேஷம் கட்டுகிறாராம். இதில் தாராளமாக கவர்ச்சியும் காட்டியிருக்கிறாராம். 
                                   
                                                  இதற்கிடையில் அன்னாயும் ரசூலும் என்ற மலையாளப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ஆன்ட்ரியாவின் கால்ஷீட்டுக்காக மலையாளத்தில் 5 படங்கள் வரை காத்திருப்பில் இருக்கிறது. 
                                   தமிழில் சில புதுமுக இயக்குனர்கள் உள்பட பத்து பேரிடம் கதை கேட்டிருக்கிறார். விஸ்வரூபம் ரிலீசுக்குப் பிறகு எந்தப் படத்தில் நடிப்பது என்பதை டிக் செய்வாராம் ஆண்ட்ரியா.